வெள்ளி, ஏப்ரல் 21, 2006

'வழி' - 2

2 முரண்பாட்டு நியதி

இங்கே
அழகு அழகாகிறது - அழகின்மை இருப்பதினால்
நல்லது நல்லதாகிறது - தீமை இருப்பதினால்

இருப்பதும் இல்லாததும் சேர்ந்தே இருக்கிறது
கடினமும் சுலபமும் ஒன்றையொன்று சமனாக்குகிறது

நீளமும் குட்டையும் ஒன்றையொன்று வேறுபடுத்துகிறது
மேலும் கீழும் ஒன்றையொன்று தாங்குகிறது

குரலும் ஓசையும் ஒன்றையொன்று பொருத்துகிறது
முன்னும் பின்னும் ஒன்றையொன்று தொடர்கிறது

இந்த
முரண்பாட்டு நியதியைப் புரிந்த அறிஞன்
செய்யாமல் செய்கிறான் சொல்லாமல் தெளிவிக்கிறான்

பற்றற்று பணிபுரியும் பக்குவம் பெற்றதனால்

உயர்வும் தாழ்வும் அவனைத் தொடுவதில்லை
உயிரைக் கொடுத்தாலுமவன் சொந்தம் கொண்டாடுவதில்லை

புகழைத் தேடி பணிசெய்யாத காரணத்தால்
புகழே நாடியவனை விட்டுப் பிரிவதில்லை.


***********

எதிர்மறை விளைவுகள் எதிலும் உள்ளன. பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பும் நிச்சயம். வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியினாலும் அதன் திரியில் உள்ள இருட்டை நீக்க முடியவில்லை. கீதையில் வரும் 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற கருத்தும், பஜகோவிந்ததில் வரும் 'புனரபி ஜனனம், புனரபி மரணம்' என்ற கருத்தையும் இந்த அத்தியாத்தில் பார்க்கலாம். பஜகோவிந்தத்தின் பொருளை விளக்கும் குமரனின் இணையப் பக்கம் இங்கே.

2 Comments:

At 5:37 PM, Blogger குமரன் (Kumaran) said...

அருமையான கருத்துகள் அண்ணா.

 
At 9:21 AM, Blogger ரங்கா - Ranga said...

நன்றி குமரன். பாராட்டு லாவோட்ஸேக்குத் தான் செல்ல வேண்டும். தமிழ்ப்படுத்தியது மட்டும் தான் என் வேலை.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home