'வழி' – 4
4. பரப்பிரும்ம சக்திதொடுவானம் போல்பரந்து வியாபித்து இருக்குமது
எடுக்கெடுக்கக் குறையாது பரப்பிரும்ம சக்தியது
கூர்மையை மழுங்கடிக்கும் தளைதனையே அறுத்துவிடும்
கூசுகின்ற ஒளிதனையே தெளிவாக்கி இதமளிக்கும்
ஆழ்மண்ணிலும் தெரியுமது உயர்வானிலும் தெரியுமது
முழுமையும் வெறுமையும் மீதமும் அதுவே
ஆதியில்லா அந்தமில்லா பரப்பிரும்ம சக்தியின்
நீதியான தந்தையின் மூலத்தை நானறியேன்.
**************
முதன் முதலாக இந்த அத்தியாத்தை படித்த போது திருவிளையாடலில் வரும் 'பாட்டும் நானே, பாவமும் நானே' - குறிப்பாக அதில் வரும் 'எதிலும் இயங்கும் இயக்கம் நானே' வரி - ஞாபகத்திற்கு வந்தது. சற்று யோசித்ததில் பிரகலாதனின் "தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்" வாக்கியம் நினைவுக்கு வருகிறது.
திருமூலரின் பாடல்:
"அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை
அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை
அந்தமில்லானுக்கு அடுத்தசொல்தான் இல்லை
அந்தமில்லானை அறிந்துகொள்பத்தே"
மற்றும் மாணிக்கவாசகரின் – ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை’ பாடலும் நினவுக்கு வருகிறது.
கடவுள் என்று பார்க்காமல், நந்தலாலா என்று பார்த்த பாரதியின் பாடலும் (காக்கைச் சிறகினிலே நந்தலாலா), சக்தி என்று பார்த்த பாரதிதாசனின் பாடலும் (எங்கெங்கு காணினும் சக்தியடா) இந்தக் கருத்தைத்தான் தெரிவிக்கின்றன. கடவுளோ, சக்தியோ, இயற்கையோ - எப்படி அழைத்தாலும், அந்த சக்தியின் மூலம் இதுவரை தெரியவில்லை என்பது தான் உண்மை.
2 Comments:
Ranga,
My appreciations for posting such philosophical thoughts here in this website. Really interesting.....
Pls Continue to do more.
We have a yahoo group Theory_Of_Everything... . see if that interests you.
Thanks Thiru Moolan for your comments. Yes - I intend to publish all the 81 chapters as I understood - in Tamil.
I will definitely look it up in Yahoo groups.
Ranga.
கருத்துரையிடுக
<< Home