சனி, மே 20, 2006

'வழி' – 6

6. சிந்தனை பூமி

திசையெல்லாம் விரவிநிற்கும் பூமித்தாயின் ஆற்றலைப்போல்
அசைவில்லா சிந்தனையின் ஆற்றலுக்கும் எல்லையில்லை

சிந்தனையின் ஆழத்தில் சொர்க்கத்தின் வழியிருக்கும்
தந்துனக்கு வாழ்வளிக்கும் வற்றாத ஊற்றைப்போல்.

*************

யோசனை (எண்ணம், நினைப்பு) இல்லாமல் இருக்கும் நேரம் குறைவு. தியானம் என்பதே இரண்டு நினைப்புகளுக்கு இடையே இருப்பதுதான், பதஞ்சலி யோகத்தில் சொல்லியிருப்பது போல. (द्रुश्ट अनुस्रविक विशय विट्र्स्नस्य वस्तिकर सम्ज्न वैराग्यम् )

பற்றில்லாமல் இருப்பது தான் துறவரம். எண்ணங்களைத் துறந்து ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கையில் தெளிவாகும் உண்மைகளைத் தான் இங்கு குறிப்பிடுகிறார் என்பது என் கருத்து. ஸென் புத்த பயிற்சிகளிலும் ஸாஸென் (Zazen) தியானம் மிக முக்கியமானது. இந்த வற்றாத உற்றை (சிந்தனையை) பூமியின் ஆற்றலுக்கு ஒப்பிட்டு இருப்பதும் நயமானது.

கீதையிலும் கண்ணன் யோகத்தின், தியானத்தின் அருமைகளை ஆழமாக உரைத்திருக்கிறார். உன்னிகிருஷ்ணன் பாடும் 'ராம நாமமே தருமே பேரின்பமே' என்ற பாணியில் 'தியானமே தருமே பேரின்பமே' என்று பாடத் தோன்றுகிறது.