ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

'வழி' - 54

'வழி' - 54
ஞானத்தின் உணர்வு

வழியதனைப் பற்றிவிட்டால் விழிப்பும் வந்திடுமே
விழிப்பிங்கே வந்துவிட்டால் இழப்புமே இருக்காதே

உனக்குள்ளே வளர்த்திட்டால் உண்மையும் புலனாகும்
உன்குடும்பம் உணர்ந்திட்டால் வளமாகும் உன்வாழ்வும்

வீடெல்லாம் அறிந்தாலே ஊரும் வழிப்படுமே
நாடும் நிலைப்படுமே வழியுணர்ந்த ஊர்களாலே

உலகமும் உணர்ந்திடுமே நாடெல்லாம் உணர்ந்திட்டால்
உலகமும் உணர்ந்திடவே உன்வழியை உணர்வாயே.



**********

'உலகம் உன்னுள்ளே' என்ற தத்துவத்தை ஒட்டி எழுதப்பட்ட அத்தியாயம் இது. தனி மனிதன், வீடு, நாடு, உலகம் என்ற வரிசையில் மாற்றங்கள் வருகின்றன. காந்தியடிகள் சொன்னது: "உலகத்தில் காண வேண்டிய மாற்றத்தை உன்னுள்ளே காண்!". இது போன்ற உலகத்தை நம்முள் பார்ப்பது பற்றிய தத்துவங்கள், இந்து, பௌத்த மதங்களில் அதிகம் உண்டு; இது தவிர மற்றைய மதங்களிலும் இது போன்ற தத்துவத்தைப் பார்க்கலாம்.

விழிப்பு வந்துவிட்டால் இழப்புகள் இல்லை; ஒவ்வொருவரும் விழித்துக் கொண்டால் உலகத்திலே இழப்பில்லை என்பதை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இதேபோன்ற தொடர்பு பற்றிய கருத்தை ஆங்கிலத்தில் "macrocosm is in microcosm"; முன்னாளில் தமிழில் 'பிரம்மானந்தம் பிண்டானந்தத்தில்' என்றார்கள்.