'வழி' – 47
47. உள்ளிருக்கும் வழிவழியாலே உருவான வடிவமாய் நீயிருக்க
வழியுணர வெளியே செல்லவும் வேண்டுமோ?
ஒளிதருமே உள்ளிருக்கும் உண்மை புரிந்தாலே
வெளியிருக்கும் விவரமும் இதனாலே அறிவாயே
வெல்லுகின்ற வழியதனை உணர்ந்தே அறிந்ததனால்
செல்வானே புவியெங்கும் ஆசானும் நகராமல்
செய்யாமல் செய்விப்பான் பார்க்காமலே அறிகின்றான்
மெய்யான ஞானமதை சொல்லாமலே புரிவிப்பான்
*********
பிரபஞ்சத்தின் சக்தியினை, மகத்துவத்தை அறிய வெளியே தேடித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தன்னுள் உணர்ந்து நோக்கினாலேயே வெளியிருக்கும் மகத்துவம் புரிந்துவிடும் என்கிறார் ஆசிரியர்.
இந்துத் தத்துவங்களிலும் யோகத்தின் மூலமாக முக்தியடைவதை ஒரு முக்கியமான வழியாகக் காண்பித்திருக்கிறார்கள். உடலையையும் மனத்தையும் ஒருங்குபடுத்தி முக்தி நிலையை அடைய யோகம் உதவும். சீனத் தத்துவத்திலும் கலாச்சாரத்திலும் யோகம் - உடல் மன நிலைக் கட்டுப்பாடு ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home