சனி, பிப்ரவரி 17, 2007

'வழி' – 45

45. அசையா மனத்தின் உயர்வு

விரிந்த விண்ணின் முழுமையுங்கூட
பரந்த வெற்றிடமாய் தெரியுமிங்கே

மாறாத விண்ணின் முழுமையோடு
தீராது தந்திடுமே வழியுமிங்கே

வித்தகரின் வார்த்தைகளின் பொருளுங்கூட
பித்தனின் உளரலாய்த் தோன்றுமிங்கே

நியதியான இயற்கையின் செயலுங்கூட
தீயதின் வெளிப்பாடாய்க் குழப்புமிங்கே

அசைவு பனிக்குளிரை வெல்லும்
அசையாமை காய்ச்சல் சூடுதணிக்கும்

அசையாத மனத்தினாலே ஆசானும்
திசைகாட்டித் தருவானே இப்புவியதற்கே


*********

இந்த அத்தியாயத்தில் மனதில் சலனம் இல்லாமல் நிலையாய் இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறார் ஆசிரியர். மனதில் குழப்பங்கள் வருவதற்கு மனதில் வரும் சலனங்களே காரணம். குழப்பங்கள் வருவதால் நல்லவைகளும் தீயதாய்த் தெரியும். 'வழி' அறிந்த ஆசான் இதனால் மனதை ஒருமுகப்படுத்தி சலனங்கள் இல்லாமல் இருக்கிறான்; அதனால் தான் அவனால் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடிகிறது.