'வழி' – 42
42. 'வழி' விலக்கும் வன்முறைஒன்றான 'வழி'யுமே தந்ததே ஒன்று
ஒன்றோடு ஒன்றுசேர வந்ததே இரண்டு
இரண்டோடு ஒன்றாகப் பிறந்ததே மூன்று
திரண்டதே இவ்வாறே ‘வழி’யின் பிம்பங்கள்
இரண்டும் வந்ததே ஒன்றின் முடிவிலே
இரண்டறக் கலந்ததே முதலும் முடிவுமே
சித்தமும் தேடுதே உயர்வை அடையவே
நித்தமும் நினைக்குதே தாழ்மையத் தவிர்க்கவே
வாழ்க்கையில் முரண்களின் பொருளறிந்த ஆசானும்
தாழ்மையை இழிவாக நினைப்பதும் இல்லையே
தன்னையே வெற்றிக்காக இழப்பார் இருக்கையிலே
தன்னையே வென்றதனால் செழிப்பார் சிலரே
வன்முறையே துணையாக வாழும் மனிதருக்கே
வன்முறையால் முடிவேதான் வருமே இங்கே
*********
இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் 'வழி'யிலிருந்தே அனைத்தும் வந்ததை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார். முழுமையானதும், முதன்மையானதுமான 'வழி'யிலிருந்து வந்தவை, அந்த வழியின் தன்மையைப் போலவே இயல்பாக இருக்கின்றன. இதைப் புரிந்து கொண்டு இயற்கையை ஒற்றி நடப்பவர்கள் வன்முறையை விலக்குகிறார்கள் - காரணம் வன்முறை இயல்பானது அல்ல. இதைப் புரிந்து கொள்ளாமல் வன்முறையை நாடுபவர்கள் அந்த வன்முறையாலேயே மடிகிறார்கள்.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home