‘வழி’ -32
32. வழியொத்த கடல்வடிக்காத பாறைக்குள் ஒளிந்திருக்கும் சிலைகள்போல்
வழியுணர்த்தும் ஞானத்தின் அளவுக்கும் எல்லையில்லை
ஞானத்தின் விளைவாலே தூய்மையும் வந்திடுமே
வானத்தின் மடிதோன்றும் மழைத்துளியின் தூய்மைபோல்
வடிக்காத நிலையிலே முழுமையான பாறையதை
வடிவங்கள் மாறுகையில் வகைப்படுத்த நேரிடுமே
வகையதிகம் வந்துவிட்டால் முழுமையும் சிதைந்திடுமே
வகைப்படுத்தும் வேலையிலே ‘வழி’யுமே மறந்திடுமே
வசதிக்காக வகைப்படுத்தி பெயரிட்டு அழைத்தாலும்
நிசத்தினிலே முழு‘வழி’யின் தொடர்புதனை மறக்காதே
சுழித்தோடும் நதியாவும் நிற்கின்ற கடல்சேரும்
'வழி'த்தோன்றும் வகையாவும் 'வழி'யோடு கலந்திடுமே.
*********
இந்த அத்தியாயத்தில் இலக்கின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார். இலக்கை அடைவதற்கு பல பாதைகள் உண்டு. பாதையின் வகையிலும், பெயரிலும் அதிகமான கவனம் சென்றால், இலக்கை அடைவதில் பின் தங்கிவிடுவோம். ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு: ‘Losing the forest for trees’ – என்று.
எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், வகை வகைகளாகப் பிரித்தாலும், இறுதியில் வழி ஒன்றுதான் என்பதை அழகாக விளக்கியிருக்கிறார். முக்கிய போதனை: 'வகைப்படுத்துவதில் அளவுக்கதிகமான கவனம் கூடாது'.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home