'வழி' - 25
25. மூல வழிவானும் மண்ணும் தோன்றும் முன்னாலே
நானும் நீயும் பிறப்பதற்கு முன்னாலே
விந்தையாய் உள்ளுமாய் புறமுமாய் மாறாமல்
தந்தையாய் அனைத்திற்கும் இருந்ததே ஓர்சக்தி
பெயரேதும் இல்லாமல் வழிகாட்டி இருந்தமையால்
தாயானா சக்தியதை 'வழி'யென்றே அழைத்தேனே
மூலமாய் இருப்பதானால் முதலுமில்லை முடிவுமில்லை
மூலமாய் வந்தெங்கும் முழுமையாய் வியாபித்ததே
வானும் மண்ணும் வந்ததிங்கே 'வழி'யினாலே
தானும் பெற்றதுவே மூலத்தின் தன்மையதை
விண்ணாகவும் மண்ணாகவும் வெளிப்பட்ட 'வழி'தானே
பெண்ணாகவும் ஆணாகவும் மண்ணிலே தோன்றியதே
மூலமான சக்தியதின் வெளிப்பாடு அறிந்ததனால்
பலமான ஆசானும் 'வழி'யொற்றி நடக்கின்றான்.
*********
இந்த அத்தியாயத்தில் எல்லாவற்றிற்கும் மூலமான சக்தியை - 'வழி'யைப் பற்றி விளக்குகிறார். ஸ்ரீ ஆதி சங்கரரின் நிர்வாண மஞ்சரி ஸ்லோகங்கள் இதே போன்று பரப்பிரும்ம சக்தியைப் பற்றி விவரிக்கிறது. திரு ஸ்ரீகாந்தின் பக்தியோகம் பதிவில் 'யானாகிய சிவம்' தலைப்பில் இதைப் பற்றி விரிவாகப் படிக்கலாம்.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home