'வழி' - 21
21. பரப்பிரும்ம சக்தியின் வடிவங்கள்பரப்பிரும்ம வழியைப் பற்றிவிட்டாலே
பிரபஞ்சத்தின் மூலத்தை அடைந்திடலாமே
உருவமில்லா பிரம்மத்தின் துணையில்லாமல்
உருவங்கள் பிரபஞ்சத்தில் வரமுடியாதே
கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்திருந்தாலும்
கண்ணில் தெரிபவையில் வெளிப்படுகிறதே
அசையாமல் என்றும் நிலைத்திருந்தாலும்
அசைவின் சக்தியாய் நிறைந்திருக்கிறதே
பெயரில்லா பரப்பிரும்ம சக்தியினாலே
பெயருள்ள அனைத்துமே தோன்றியதே
விந்தையான உலகின் வடிவங்களிலே
தந்தையான சக்தியின் வலிவறிந்தேனே.
***********
இந்த அத்தியாயத்தில் மூல சக்தியின் பரிமாணங்களை விளக்குகிறார். கொஞ்ச நாள் படித்த ஒரு உபநிஷத புத்தக விளக்கத்திலிருந்து (சர் அரபிந்தோ) ஒரு பாடல் இந்த அத்தியாயத்தோடு பொருந்தி வருகிறது.
अनेजदॆक् मनसो जवीयो नैनध्वॆवा आप्नुवन् पूर्व्मष्थ् |
थध्दवथोन्यानतयॆति तिश्टत् तस्मिन्न्पॊ माथरिश्वा दधाति
Isha Upanishad – 4
அரவிந்தரின் மொழிபெயர்ப்பில் இந்த இஷா உபநிஷதப் பாடலுக்கு, இந்த மாதிரி விளக்கம் வருகிறது.
"எது நகராமலிருந்தாலும், மனோவேகத்தை விட வேகமாயும், தேவர்களாலும் அணுக முடியாமல் எப்போதும் முன்னே செல்வதாகவும், நின்று கொண்டிருக்கையிலேயே ஓடுபவை அனைத்தையும் கடந்து செல்வதாகவும் இருக்கிறதோ, அதுவே சகல உயிர்களுக்கும் மூலமாக இருக்கிறது"
எனக்கு தேவநாகரி எழுத்தில் தட்டச்சு செய்து பழக்கம் இல்லாததால், அதில் பிழைகள் இருக்கலாம். அதே போல அரவிந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு பெரிய புத்தகம் - சுருக்கமாக தமிழில் மொழிபெயர்த்ததிலும், சாரம் கொஞ்சம் குறைந்து இருக்கலாம். இருந்தும், மூல விளக்கம் பொருந்தியே இருக்கிறது.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home