சனி, செப்டம்பர் 23, 2006

'வழி' – 24

24. விலக்க வேண்டியவை

நிலைதவறிப் போய்விடுமே நுனிக்காலில் நின்றாலே
தொலைதூர ஓட்டத்திற்கு வேகம்மட்டும் போதாதே

கற்றவர் மதித்திடவே ஆணவம் தடையாகுமே
மற்றவர் புகழ்ந்திடவே தம்பட்டம் உதவாதே

தற்பெருமை பேசுவோர்க்கு பெருமை சேராதே
பெற்றோரும் இகழ்வாரே தன்மானம் இழந்தாலே

வீணாக்கிடுமே இக்குணங்கள் மக்களின் சக்தியதை
வீணாகிப்போன உணவே விஷமாவது போலே

விலக்கிடுவான் சக்தியினை விரயமாக்கும் குணங்களையே
பலமான வழியறிந்த ஆசானும் இதனாலே!


********

நல்ல குணங்களை வளர்க்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே போல தீய குணங்களை விலக்குவதும் முக்கியம். பதினொன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை ஒத்து இந்த அத்தியாயத்தில், விலக்க வேண்டிய குணங்களை பற்றி எழுதியிருக்கிறார். இந்த மாதிரி குணங்கள் நம்முடைய சக்தியை விரயம் செய்து விடும். சக்தி விரயமானால், செய்ய வேண்டிய கடமைகளையோ, அல்லது வளர்க்க வேண்டிய குணங்களையோ செய்வது குறைந்து விடும். ஆதலால் இது போன்ற விலக்க வேண்டிய குணங்களால் வரும் நஷ்டம் இரட்டிப்பாகிறது.

இது போன்ற கருத்தை திரு ஜேசுதாஸ் பாடிய ஒரு பாடலில் கேட்டிருக்கிறேன் - "நல்லதை நினை மனமே, வீணாய் பொல்லாததை நினையாதே" என்று ஆரம்பிக்கும் பாடல்.

3 Comments:

At 7:48 PM, Blogger Boston Bala said...

thought provoking... thx!

 
At 6:27 PM, Blogger ரங்கா - Ranga said...

You are welcome Bala ;-)

 
At 7:28 PM, Anonymous பெயரில்லா said...

http://reallogic.org/thenthuli/?p=193

Please read this and make some contribution

 

கருத்துரையிடுக

<< Home