'வழி' - 27
27. ஆசானின் சிறப்புதேர்ந்த நடையில் தடம் தெரியாது
உயர்ந்த பேச்சில் குறை தெரியாது
சிறந்த கணக்கனுக்கு வாய்பாடு எதற்கு?
பொருந்திய கதவுக்கு துணைக்கால் எதற்கு?
தேர்ந்த கட்டிற்கு கயறுஅதிகம் வேண்டாம்
இருந்தும் கட்டை அவிழ்ப்பது கடினம்
இறைவனின் படைப்பில் வீணானது இல்லை
அறிந்த ஆசானும் வீணாக்குவது இல்லை
பிறந்த மக்களில் பேதங்களும் இல்லை
சிறந்த ஆசானின் போதனையால் உயர்வர்
பேதங்கள் பிறப்பில் இல்லை என்றாலும்
போதனையின் சிறப்பை உணராத மக்களும்
மற்றவரின் திறமையை மதிக்காது போனாலே
கற்றவையின் சிறப்பு தங்காமல் போகுமே.
*********
பிறப்பினாலே பேதங்கள் இல்லை; இயற்கையின் (ஆண்டவனின்) படைப்பில் வீணாவதும் இல்லை. இந்த அத்தியாயத்தில் இயற்கையிலே மனிதனுக்கு குறை இல்லையென்றாலும், வழியை ஒட்டி வாழ்வதினால் முழுமை பெறலாம் என்றும் எடுத்துரைக்கிறார்.
இந்துத் தத்துவங்களிலும், 'காரணம் இல்லாமல் காரியம் இல்லை', 'ஆண்டவனின் செயல்களில், படைப்புகளில் தாழ்வென்பதே இல்லை' என்றேல்லாம் சொல்வது உண்டு.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home