'வழி' - 31
31. வழியும் ஆயுதமும்அழிக்கும் ஆயுதங்கள் அளிப்பவையெல்லாம்
அழிவும் தீராத பழியும்தானே
வழியறிந்த மக்களும் இதனாலேயே
கழித்திடுவார் ஆயுதம்தரும் வன்முறையை
அழகில்லை ஆயுதந்தரும் வெற்றியிலே
அழிவிலே மகிழ்பவர் மனிதருமில்லை
பெருமையே அடைந்தாலும் வெற்றியிலே
முறையானது உயிரிழப்பில் அஞ்சலிதானே
உலகில் உன்னதமான பணிகளிலே
உயர்வானது உயிர்காக்கும் கடமைதானே
உயிர்களைக் காக்கும் இலக்கையே
உயிரிழப்பால் அடையவே முடியாதே
********
வன்முறையைப் பழிக்கும் விதமாக அமைந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியாக, வன்முறைக்கு உதவும் ஆயுதங்களின் தீமை பற்றி இங்கு விளக்குகிறார். 'கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு' என்ற சொல்லுக்கு விளக்கம் போல் அமைந்திருக்கிறது இந்த அத்தியாயம்.
வன்முறையில், போரில், அழகில்லை; பெருமையும் இல்லை. உயிரிழப்பில் தெரிவிக்க வேண்டியது அஞ்சலிதான். இதை அழகாக விளக்கியதோடு இல்லாமல், உயிரைக் காப்பது உயர்ந்த தர்மம் என்பதையும் எடுத்துரைக்கிறார்.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home