‘வழி’ - 33
33. சாகாவரம்மற்றவரை புரிந்து கொண்டால் அறிவு;
தன்னைத் தெரிந்து கொண்டால் ஞானம்.
மற்றவரை வெல்ல வேகம் வேண்டும்;
தன்னையே வெல்ல விவேகம் வேண்டும்.
இருப்பது போதுமெனப் புரிந்தவன் தனவான்
உறுதிமனம் பெறுவதற்கு விடாமுயற்சி வேண்டும்
மாறாத நிலையடைய பொறுமை மிகவேண்டும்
இறந்தும் அழிவற்று இருப்பதே சாகாவரம்
*********
இறப்பை வெல்லும் ஆசை அனைவரிடத்திலும் உள்ளது. பிறப்பு என்று ஒன்று இருக்கையில் இறப்பும் நிச்சயம் என்று தெரிந்தும், சாகாவரம் பெற வேண்டாதவர் அனேகமாக இல்லை. இந்த அத்தியாயத்தில் சாகாவரம் பற்றி விளக்குகிறார்.
வள்ளுவரின் புகழ் அதிகாரத்தில் இதைப் போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். குறிப்பாக இந்த இரு குறள்கள் இதை விளக்குகின்றன.
நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. [235]
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று. [236]
விளக்கத்திற்கு இங்கே செல்லவும்.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home