சனி, டிசம்பர் 16, 2006

'வழி' - 36

36. வாழ்க்கையின் நியதிகள்

சுருங்க முதலில் விரியத்தான் வேண்டும்
பராசயமாக முதலில் திடமாகத்தான் வேண்டும்

இறங்க முதலில் உயரத்தான் வேண்டும்
பெறவே முதலில் தரத்தான் வேண்டும்

தன்மையும் மென்மையும் வன்மையை வெல்லும்
பொன்னான இவையாவும் இயற்கையின் நியதியாகும்

வானுக்கு பறக்க ஆசை இருந்தாலும்
மீனுக்கு முழுகும் தண்ணீரே இல்லம்

எதிரியை வீழ்த்தும் போரின் ஆயுதமே
எதிரே வராமல் ஒளிப்பது நலமே.

*********

இந்த அத்தியாயத்தில் ஒவ்வொரு உயிரும் ஏற்ற தாழ்வுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்று உரைப்பதோடு இல்லாமல், வன்முறையைத் தூண்டும் ஆயுதங்களை பெருக்காமல் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார்.

வன்முறையைப் பற்றி முந்தைய அத்தியாயங்களில் (30, 31) சொன்னதற்கு தொடர்ச்சியாக இந்த அத்தியாயத்தைக் கொள்ளலாம். வாழ்க்கையின் சுழற்சியைப் புரிந்து கொண்டு வழியை ஒத்து வாழ்வதை விட்டு, வன்முறையால் அதை மாற்ற முயல்வது முடிவைத் தராது என்பது ஆசிரியரின் வாதம்.