'வழி' – 60
'வழி' – 60அரசாண்மை
ரோஜாவில் மாலையதை தொடுத்திடும் திறத்தினை
ராஜாவின் அரசாண்மை ஒத்திடல் வேண்டுமே
மெலிதான மடல்தாங்கி கோர்க்கின்ற விரல்தானே
வலிவோடு அகற்றிடுமே கூரான முள்ளதனை
மென்மையும் வேண்டுமே இதழ்களைத் தாங்கவே
வன்மையும் வேண்டுமே முட்களைத் தீண்டவே
வன்மையான முட்களுமே கரத்தினைக் கிழிக்காமல்
மென்மையான மடல்களுமே சருகாகி உதிராமல்
தன்மையாக மாலையதை கட்டிடும் திறத்தாலே
மேன்மையும் தரலாமே நந்தவன மலர்களுக்கே
பூக்களைக் கட்டுகின்ற திறத்தினை உணர்ந்தாலே
மக்களைக் காத்திடும் அரசனும் சிறப்பானே.
**********
ஒரு அரசின் மேன்மை அதன் வலிமையில் மட்டுமல்ல, அது தன் மக்களை எப்படி மென்மையாகவும் கையாள்கிறது என்பதைப் பொறுத்தும் இருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறார். இதை விளக்க உவமையாக சிறு மீனை சமைக்க வேண்டிய திறத்தை ஆசிரியர் குறிப்பிடுகிறார். மீன் சமைத்ததை சொந்த அனுபவத்தில் உணர்ந்து அறிந்ததில்லை. அதனால் என் அனுபவத்தில் அதற்கு நிகரனான விஷயத்தை, ரோஜா மாலை தொடுக்கும் திறனை உவமையாக இந்த மொழிமாற்றக் கவிதையில் தந்திருக்கிறேன்.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home