வழி - 63
வழி - 63செய்யாமல் செய்
துடிப்பைநீ உணராத பொழுதிலுமே
துடிக்கும் இதயம் உன்னுள்ளே
செய்கின்ற நினைப்பும் இல்லாமலே
செய்கின்ற பக்குவம் பெற்றிடுவாய்
இயக்கத்தில் நினைப்பை இழந்தாலே
இயக்கத்தில் ஒன்றாகிக் கலந்திடலாம்
செயலில் அளவு உயர்வில்லையே
செயலின் உயர்வு முழுமையில்தானே
முழுதாக நீக்காத குறைகளுமே
முழுமையை அடைவதை குலைத்திடுமே
முளையிலே முழுமையாய் நீக்குகையில்
களைகளைக் களைவதும் சுலபந்தானே
அறிந்தே ஆசானும் இதனாலே
சிறியதிலும் முழுமை காண்பானே
செயலில் தன்னையிழந்த ஆசானையிதனாலே
செயலின் கடுமை தாக்குவதில்லையே.
**********
இந்த அத்தியாயத்தில் இரண்டு கருத்துகளை ஆசிரியர் முன் வைக்கிறார். முதலாவதாக செயல்களில் உயர்வு அதன் அளவில் அல்ல, முழுமையில்தான் என்கிறார். இரண்டாவதாக செயலில் தன்னையிழப்பதால் அதன் கடுமை தெரியாது; முழுமை பெறுவது எளிது என்பதையும் உரைக்கிறார்.
முதல் கருத்தைப் படிக்கையில் 'செய்வன திருந்தச் செய்' நினைப்புக்கு வருகிறது. மனதுக்குப் பிடித்த செயலில் ஈடுபடுகையில் அதன் பளுவும், செலவாகும் காலமும் தெரிவதில்லை. செய்கையில் மனது ஒன்றி, அதில் முழுமையும் இருந்துவிட்டால் அதைவிட உயர்வானது எதுவும் இல்லை. கீதையின் "கர்ம யோகம்" நினைப்புக்கு வருகிறது.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home