ஞாயிறு, மார்ச் 13, 2011

வழி - 63

வழி - 63
செய்யாமல் செய்


துடிப்பைநீ உணராத பொழுதிலுமே
துடிக்கும் இதயம் உன்னுள்ளே

செய்கின்ற நினைப்பும் இல்லாமலே
செய்கின்ற பக்குவம் பெற்றிடுவாய்

இயக்கத்தில் நினைப்பை இழந்தாலே
இயக்கத்தில் ஒன்றாகிக் கலந்திடலாம்

செயலில் அளவு உயர்வில்லையே
செயலின் உயர்வு முழுமையில்தானே

முழுதாக நீக்காத குறைகளுமே
முழுமையை அடைவதை குலைத்திடுமே

முளையிலே முழுமையாய் நீக்குகையில்
களைகளைக் களைவதும் சுலபந்தானே

அறிந்தே ஆசானும் இதனாலே
சிறியதிலும் முழுமை காண்பானே

செயலில் தன்னையிழந்த ஆசானையிதனாலே
செயலின் கடுமை தாக்குவதில்லையே.


**********

இந்த அத்தியாயத்தில் இரண்டு கருத்துகளை ஆசிரியர் முன் வைக்கிறார். முதலாவதாக செயல்களில் உயர்வு அதன் அளவில் அல்ல, முழுமையில்தான் என்கிறார். இரண்டாவதாக செயலில் தன்னையிழப்பதால் அதன் கடுமை தெரியாது; முழுமை பெறுவது எளிது என்பதையும் உரைக்கிறார்.

முதல் கருத்தைப் படிக்கையில் 'செய்வன திருந்தச் செய்' நினைப்புக்கு வருகிறது. மனதுக்குப் பிடித்த செயலில் ஈடுபடுகையில் அதன் பளுவும், செலவாகும் காலமும் தெரிவதில்லை. செய்கையில் மனது ஒன்றி, அதில் முழுமையும் இருந்துவிட்டால் அதைவிட உயர்வானது எதுவும் இல்லை. கீதையின் "கர்ம யோகம்" நினைப்புக்கு வருகிறது.