வழி - 66
வழி - 66பணிவின் உயர்வு
நிலத்திலும் தாழ்வாக கடலிங்கே இருந்தாலும்
உலகத்தின் நதியாவும் கடல்தேடி வந்தடையும்
மூடிய பாத்திரத்தில் நீரேந்த முடியாதே
கூடியே வந்திடுமே திறந்த கலத்தினிலே
தரத்திலே தாழ்வில்லை குணத்திலே பணிவதனால்
வரவும் பெருகிடுமே மனமும் திறந்தாலே
ஓட்டிடுவாய் துயர்களையே திறந்த மனத்தாலே
போட்டிகளும் வாராதே பணிவான குணத்தாலே
போட்டியிடும் மனப்பாங்கு இல்லாத காரணத்தால்
போட்டியிலே தோல்வியெனும் நிலையிங்கு இல்லையே!
**********
இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் பணிவின் பெருமையை விளக்குகிறார். பணிவின் பெருமை பற்றி அனைத்து கலாச்சாரங்களிலும் எழுதியிருக்கிறார்கள். இந்த உவமைகளில் சிலவற்றை மற்ற இடங்களில் பார்த்ததாக நினைவு. விளக்கத்திற்கு பதிலாக அடக்கமுடைமை அதிகாரத்திலிருந்து இரண்டு குரள்களைத் தந்திருக்கிறேன்.
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home