வழி - 70
வழி - 70மூலத்தின் தெளிவு
வழியதனின் வார்த்தைகளின் பொருளுமே புரிந்தாலும்
வழிப்படி நடந்திடுவோர் எண்ணிக்கை குறைவிங்கே
மூலத்தின் வெளிப்பாடே வழியதனின் மொழியினிலே
மூலத்தை மறந்தோர்க்குத் தெளிவிங்கே வாராதே
ஜாலமான வார்த்தைகளில் மயங்குகின்ற மக்களுக்கு
மூலமான வழிமொழியின் மதிப்பிங்கே தெரியாதே
தனமான உடல்காக்கும் உடைகளில் குறைந்தாலும்
மனங்காக்கும் வழியதனால் ஆசானும் நிறைவானே
மூலத்தின் மதிப்பறிந்த ஆசானை இதனாலே
நலமாகப் பற்றிடுவார் வழிநடக்கும் மக்களுமே.
**********
உலகின் பெரும்பான்மையான மதங்களின் போதனைகள் வன்முறையை போதிப்பதில்லை. மற்ற உயிர்களிடத்து அன்பு செலுத்துவதையும், பிறருக்கு துன்பம் தராமல் உதவி செய்வதைப் பற்றியும் கிட்டத்தட்ட அனைத்து மதங்களுமே எளிமையாக எடுத்துரைக்கின்றன. இந்த போதனைகள் புரிந்து கொள்ள எளிமையாக இருந்தாலும், இந்த மதங்களைப் பின்பற்றுபவர்களே இவைகளைக் கடைப்பிடிப்பதில்லை. ஒருவரின் உடைகளைப் பொறுத்து மதிப்பளிப்பதும், வார்த்தை ஜாலங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் இப்போதும் நாம் காணலாம். இந்த குணங்களை சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் சுட்டிக்காட்டி மூலமான வழியின் சிறப்பை விவரித்திருப்பது ஆச்சரியமான விஷயம்.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home