சனி, ஏப்ரல் 16, 2011

வழி - 73

வழி - 73
விவேகமும் விழிப்பும்

கல்லையும் பொடியாக்கும் சுழித்தோடும் நதியுமிங்கே
புல்லை வேரறுக்க முயன்றாலும் முடியாதே

விவேகமற்ற வீரம் மரணத்தையே வரவேற்கும்
விவேகம் இருந்தாலே வினைகளைத் தவிர்த்திடலாம்

வினாக்கள் மட்டுமிங்கே விடைகளைத் தாராதே
விடைகளும் புரிந்திடுமே விழிப்பும் இருந்தாலே

வழியும் தெரிந்திடுமே விடைகள் புரிந்துவிட்டால்
வழியும் உணர்ந்தாலே முழுமையும் பெற்றிடலாம்.


**********

வேகத்தை விட விவேகம் முக்கியம் என்பது பழமொழி. அதை வலியுறுத்தும் விதமாக ஆசிரியர் விளக்கியுள்ள அத்தியாயம் இது. அஞ்சாமல் இருப்பது வீரம். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. எதற்கு அஞ்சுவது, எதற்கு அஞ்சாமல் இருப்பது என்பதை அறிவதற்கு விவேகம் வேண்டும். வீரத்தோடு விவேகம் சேர்ந்தால் அனைவருக்கும் நலம். இந்த விழிப்பு வந்துவிட்டால் முழுமையை அடைய முடியும் என்று விளக்குகிறார் ஆசிரியர்.