சனி, மே 28, 2011

வழி - 80

வழி - 80.
சொர்க்கமான நாடு

நூறுபேர் திறமொத்த இயந்திரங்கள் இருப்பினும்
பேறுபெற்ற நாட்டினிலே தேவைதான் இல்லையே

ஒளிவேகப் பயணத்தின் திறமே பெற்றாலும்
வெளியே பயணிக்க அவசியம் இல்லையே

போரிலே வெல்லவரும் தேரும் வாளுமே
ஊரிலே தூங்குமே போருமே இன்றியே

உணவும் சுவையாக உடையும் சுகமாக
குணமும் நிறைவாக குடியும் நலம்தானே

போலியற்ற உயிரனைத்தும் சேருகின்ற வீடுபோல
வேலிகளால் பிரிக்காத சொர்க்கமாகும் நாடுமிங்கே.



**********

ஒருவன் எப்பொழுது வள்ளலாகிறான்? மற்றவர்களுக்குக் கொடுக்கையில். வாங்குவதற்கு யாரும் இல்லையென்றால் வள்ளலும் இல்லை. ஒரு நாடு முன்னேறியிருக்கிறது என்று சொல்ல ‘நாட்டின் தேவைகள் தாமாகப் பூர்த்தியாகின்றன; தேவைகள் இல்லை' என்று சொல்லும் நிலை வர வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக எழுதப்பட்ட அத்தியாயம் இது. எந்த இடத்துக்கும் விரைந்து செல்லும் ஆற்றல் பெற்றிருந்தாலும், நாட்டை, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் அந்த ஆற்றலை உபயோகிக்கும் தேவையில்லை. உண்மையாக, உயர்வாக வாழ்ந்து மறைந்த உயிர்களனைத்தும் ஒரே சொர்க்கத்திற்கு செல்கின்றன என்பது போல நாட்டினுள்ளே பிரித்துப் பாதுகாக்க வேலிகளின் தேவையில்லாமல், ஒன்றான சொர்க்கமாக இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.