வழி – 81
வழி – 81உண்மையின் அழகு
அலங்காரம் வேண்டாமே என்றும் உண்மைக்கு
அலங்காரம் வந்தாலே உண்மையும் சிதைந்திடுமே
வேதம் புரிந்தவனும் வாதிப்பது இல்லையே
வாதத்தில் நுழைந்தாலே வழியும் மறந்திடுமே
சித்திகளை வேண்டுகையில் முக்தியும் நகர்ந்திடுமே
முக்தியதை உணர்ந்தாலே சித்திகளும் வேண்டாமே
தருவதால் ஆசானும் இழப்பதும் இல்லையே
தருவதால் பெறுவானே முழுமையான வழியதையே
**********
பொய்கள் செல்லுபடியாக ஜோடனை தேவை. ஆனால் உண்மைக்கு எந்தவிதமான அலங்காரமும் இல்லாமலே மதிப்பு வரும், அதன் அழகும் தெரியும். மற்றவர்களின் மதிப்புக்காக பூச்சு வேயில் இறங்கினால் உண்மை சிதையும்; முடிவில் அழகும் குலையும்.
பண்டைக்காலத் தமிழ்ப் பழமொழி: நிறைகுடம் தளும்பாது. வார்த்தை ஜாலங்களிலும், வாதத்திலும் சக்தியை செலவழிக்காமல் உண்மையை அறிவதில் சக்தியை செலுத்தினால் முழுமையான வழியை அடையலாம் என்கிறார் ஆசிரியர்.
0 Comments:
கருத்துரையிடுக
<< Home